×

திருவள்ளூர் மாவட்டத்தின் புதிய எஸ்பி பொறுப்பேற்றார்

 

திருவள்ளூர், ஜன.31: திருவள்ளூர் மாவட்டத்தின் புதிய எஸ்பியாக சீனிவாச பெருமாள் பொறுப்பேற்றுக்கொண்டார். திருவள்ளூர் மாவட்டத்தில் 21வது மாவட்ட காவல் எஸ்பியாக இருந்தவர் பா.சீபாஸ் கல்யாண். இந்தநிலையில் இவரை சென்னை தென்மண்டல பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது.

இதனையடுத்து சென்னை டிஜிபி அலுவலகத்தில் காத்திருப்போர் பட்டியலில் இருந்த ஆர்.சீனிவாச பெருமாள் திருவள்ளூர் மாவட்டத்தின் 22வது புதிய மாவட்ட எஸ்பியாக அறிவிக்கப்பட்டார். அதன்படி நேற்று காலை மாவட்ட எஸ்பி அலுவலகத்திற்கு வந்த புதிய எஸ்.பி. சீனிவாச பெருமாள், முறைப்படி பதிவேடுகளில் கையொப்பமிட்டு பொறுப்பு ஏற்றுக்கொண்டார். அவருக்கு ஏடிஎஸ்பி.க்கள், டிஎஸ்பி.க்கள், இன்ஸ்பெக்டர்கள் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.

The post திருவள்ளூர் மாவட்டத்தின் புதிய எஸ்பி பொறுப்பேற்றார் appeared first on Dinakaran.

Tags : Thiruvallur district ,Tiruvallur ,Srinivasa Perumal ,Tiruvallur district ,P. Seebas Kalyan ,21st District Police SP ,Tamil Nadu government ,Chennai South Economic Crime Branch ,Thiruvallur ,District ,SP ,Dinakaran ,
× RELATED திருவள்ளூர் மாவட்டம் திருமழிசை பேரூராட்சி தலைவர் உயிரிழப்பு