×

சூதாடிய 19 பேர் கைது ₹5.58 லட்சம், கார் பறிமுதல்

சங்ககிரி, டிச.19: சங்ககிரி மலையடிவாரத்தில் கும்பல் ஒன்று பணம் வைத்து சூதாடுவதாக, மாவட்ட எஸ்பி அருண் கபிலனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து எஸ்பி தனிப்படை எஸ்ஐக்கள் ஸ்ரீராமன், அருண்குமார், அழகுதுரை ஆகியோர், சங்ககிரி டிஎஸ்பி ராஜா, இன்ஸ்பெக்டர் (பொ) சந்திரலேகா, எஸ்ஐ உதயகுமார் ஆகியோர் கொண்ட குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்றனர். அப்போது மலையடிவாரம் கோரிக்காடு என்ற இடத்தில் கும்பல் பணம் வைத்து சூதாடிக்கொண்டு இருந்தனர். போலீசாரை பார்த்ததும், அவர்கள் தப்பியோட முயன்றனர். போலீசார் அவர்களை சுற்றிவளைத்து பிடித்தனர். விசாரணையில் அவர்கள் சங்ககிரி சோமசுந்தரம்(41), செந்தில்குமார்(38), மூர்த்தி(38), குமாரபாளையம் முத்துசாமி(38), கர்ணன்(37), தர்மலிங்கம்(43), சந்திரசேகர் (48), ஈரோடு விஜய குமார்(42), சபரிநாத்(43), சிவகங்கை மாவட்டம் இளையான்குடி வீரபிரபு(32), தூத்துக்குடி பால முருகன்(33), திருப்பூர் ராஜேஷ்குமார்(34), முத்துக்குமார்(32), பூபாலன்(33), லோகநாதன்(40), நாகராஜ்(44), மதுரை சுகுமார்(35), கோபிசெட்டிபாளையம் கனகராஜா(46), பள்ளிபாளையம் விக்னேஷ்(38) என்பது தெரியவந்தது. இதையடுத்து 19 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து ₹5 லட்சத்து 58 ஆயிரத்து 370 மற்றும் ஒரு கார், 3 டூவீலர்களை பறிமுதல் செய்தனர். சங்ககிரி டிஎஸ்பி அலுவலகம் அருகிலேயே, சூதாடிய 19 பேரை எஸ்பியின் தனிப்படை போலீசார் சுற்றிவளைத்து பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post சூதாடிய 19 பேர் கைது ₹5.58 லட்சம், கார் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Sangakiri ,Arun Kapilan ,Dinakaran ,
× RELATED என்னுடையது விஸ்வரூப வெற்றி!