×

தனியார் கல்லூரி பஸ் டிரைவர் விபத்தில் பலி

சேந்தமங்கலம், டிச.17: சேந்தமங்கலம் அடுத்துள்ள பேளுக்குறிச்சி குட்டரங்கம்பட்டியைச் சேர்ந்தவர் பூபதி (37). தனியார் கல்லூரியில் பஸ் டிரைவராக உள்ளார். இவர் நேற்று முன்தினம் நள்ளிரவு டூவீலரில் கல்லூரியில் இருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது ராசிபுரம் சாலையில் சிங்களாந்தபுரம் தனியார் நூல் மில் அருகே வளைவில் திரும்பும் போது கட்டுப்பாட்டை இழந்த டூவீலர் மின் கம்பத்தில் மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்ட பூபதிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு, தீவிர சிகிச்சையளித்தும் பலனின்றி பூபதி நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து பேளுக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post தனியார் கல்லூரி பஸ் டிரைவர் விபத்தில் பலி appeared first on Dinakaran.

Tags : Senthamangalam ,Bhupathi ,Pelukurichi Guttarangambatti ,Dinakaran ,
× RELATED சேந்தமங்கலம் நீதிபதி இடமாற்றம்