செங்கல்பட்டு, நவ. 25: சுற்றுலா வழிகாட்டிகள் உரிமம் பெற இணையதளத்தில் பதிவு செய்வது கட்டாயம் என கலெக்டர் ராகுல் நாத் தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு அரசின் சுற்றுலாத்துறை சார்பாக மாநிலத்தில் சுற்றுலா பிரிவுகளின் வளர்ச்சியை மேம்படுத்த பல்வேறு, முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக உலக சுற்றுலா தினம் 2023 அன்று சுற்றுலாத்துறை அமைச்சர், சுற்றுலா வழிகாட்டிகள் சுற்றுலா இயக்குபவர்கள், பயண முகவர்கள் சுற்றுலா போக்குவரத்து இயக்குபவர்கள் (பதிவுகள்) திட்டம் 2023 என்ற திட்டம் துவங்கப்பட்டு, சுற்றுலா தொழில் முனைவோர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
இதில், தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் சுற்றுலா வழிகாட்டிகள், சுற்றுலா இயக்குபவர்கள், பயண முகவர்கள், சுற்றுலா போக்குவரத்து இயக்குபவர்கள் (Tour Operators/Travel Agents/Tourist Transport Operators) அனைவருக்கும் அங்கீகாரம் வழங்கும் பொருட்டு https://www.tntourismtors.com என்ற இணையதளத்தில் கட்டாயமாக பதிவு மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே, செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள சுற்றுலா வழிகாட்டிகள், சுற்றுலா இயக்குபவர்கள், பயண முகவர்கள், சுற்றுலா போக்குவரத்து இயக்குபவர்கள் (Tour Operators Travel Agents Tourist Transport Operators) முறையான உரிம் பெறுவதற்கு மேற்கண்ட இணையதளத்தில் உடனடியாக கட்டாய பதிவுகள் மேற்கொள்ள இதன் மூலம் அறிவுறுத்தப்படுகிறது. மேலும், கூடுதல் விவரங்களுக்கு சுற்றுலா அலுவலகம், கோவளம் ரோடு, மாமல்லபுரம். தொலைபேசி 044-2744 2232, அலைபேசி 91769 95869 இ-மெயில் touristofficermpm@gmail.com என்ற முகவரிக்கு தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
The post செங்கல்பட்டு மாவட்டத்தில் சுற்றுலா வழிகாட்டிகள் உரிமம் பெற இணையத்தில் பதிவு செய்வது கட்டாயம்: கலெக்டர் தகவல் appeared first on Dinakaran.
