×

பொதுமக்கள் எதிர்பார்ப்பு ஜெயங்கொண்டம் அம்மா உணவகம் அருகே நகராட்சி தூய்மை பணியாளர் மர்மச்சாவு

 

ஜெயங்கொண்டம், நவ. 21: ஜெயங்கொண்டம் அம்மா உணவகத்திற்கு முன் நகராட்சி தூய்மை பணியாளர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சியில் தூய்மை பணியாளராக பணியாற்றியவர் முத்தையன். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு பணியாளர் குறைப்பு என்ற முறையில் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டிருந்தார். இந்நிலையில் ஜெயங்கொண்டத்தில் உள்ள அம்மா உணவகத்திற்கு முன்பு உயிரிழந்த நிலையில் அவரது உடல் மீட்கப்பட்டுள்ளது.

முத்தையனுக்கு , இந்திரா காந்தி என்ற மனைவியும் இரண்டு மகன்களும் உள்ளனர். முத்தையன் வீட்டிற்கு செல்லாமல் அம்மா உணவகத்திற்கு வெளியில் ஒரு ஓரத்தில் தங்கி இருந்துள்ளார். அவரது மகன்கள் மற்றும் மனைவி வீட்டிற்கு வருமாறு அழைத்தும் அவர் போக மறுத்து கடந்த ஒரு மாதமாக அம்மா உணவகத்துக்கு முன்பாகவே தங்கி இருந்துள்ளார் என கூறப்படுகிறது. ஜெயங்கொண்டம் போலீசார் முத்தையன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.

 

The post பொதுமக்கள் எதிர்பார்ப்பு ஜெயங்கொண்டம் அம்மா உணவகம் அருகே நகராட்சி தூய்மை பணியாளர் மர்மச்சாவு appeared first on Dinakaran.

Tags : Jayangondam ,Amma ,Marmachavu ,Jayangkondam Amma ,Jayangkondam ,Dinakaran ,
× RELATED ஜெயங்கொண்டம் அருகே பெண் குளிக்கும்...