- விவசாயிகளின் குறைக் கூட்டம்
- பெரம்பலூர்
- விவசாயிகள் புகார் தீர்வு கூட்டம்
- பெரம்பலூர் விவசாயிகள் புகார் தீர்வு கூட்டம்
- தின மலர்
பெரம்பலூர், நவ.19: பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் குறை தீர்க்கும்நாள் கூட்டம் வருகிற 23ம்தேதி நடைபெறவுள்ளதாக மாவட்ட கலெக்டர் கற்பகம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது: பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 23ம்தேதி (வியாழன்) அன்று காலை 10.30 மணியளவில் பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.
இந்தக் கூட்டத்தில் வேளாண்மை சம்மந்தமான நீர்ப்பாசனம், வேளாண்மை கடன் உதவிகள், வேளாண்மை இடுபொருட்கள், வேளாண்மை இயந்திரங்கள் மற்றும் விவசாயிகள் மேம்பாட்டிற்கான நலத்திட்டங்கள் பற்றிய முறையீடுகள் பற்றி விவாதிக்கப்படும். விவசாயிகள் அன்றைய தினம் நடைபெறும் கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களது குறைகளை தெரிவிக்கலாம் என மாவட்ட கலெக்டர் கற்பகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்ம தெரிவித்துள்ளார்.
The post பெரம்பலூரில் 23ம் தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம் appeared first on Dinakaran.