×

விக்கிரமங்கலத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்றவர் கைது

 

தா.பழூர், ஜூலை 24: விக்கிரமங்கலத்தில் பெட்டிக்கடையில் புகையிலைப் பொருட்கள் விற்றவரை கைது செய்து, அவரிடமிருந்த புகையிலைப் பொருட்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். விக்கிரமங்கலம் சப்-இன்ஸ்பெக்டர் மாரியப்பன் தலைமையிலான காவல் துறையினர் நாயக்கர் பாளையம் பகுதியில் உள்ள கடைகளில் திடீர் சோதனை செய்தனர். அப்பொழுது, நாயக்கர் பாளையம் நடுத்தெருவைச் சேர்ந்த கொளஞ்சி (35) என்பவரது பெட்டிக்கடையில் மறைத்து வைத்திருந்த புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்தனர். இது குறித்து வழக்குப் பதிந்து, கொளஞ்சியை கைது செய்தனர்.

 

The post விக்கிரமங்கலத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்றவர் கைது appeared first on Dinakaran.

Tags : Vikramangalam ,Tha.Bahur ,Sub-Inspector ,Mariappan ,Nayakkarpalayam ,Dinakaran ,
× RELATED (வேலூர்) மதுபாட்டில்களை கடத்தி சென்ற...