×

கொளக்காநத்தத்தில் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா

 

பாடாலூர், ஜூலை 27: ஆலாத்தூர் அருகேயுள்ள கொளக்காநத்தத்தில் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா இன்று நடைபெறுகிறது. ஆலத்தூர் அடுத்த கொளக்காநத்தம் கிராமத்தில் இன்று மாலை நடைபெறும் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டத்திற்கு ஆலத்தூர் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளரும், ஆலத்தூர் ஒன்றிய குழுத் தலைவருமான என்.கிருஷ்ணமூர்த்தி தலைமை வகிக்கிறார். மாவட்ட கழக செயலாளர் ஜெகதீசன், பெரம்பலூர் எம்எல்ஏ பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். சிறப்பு விருந்தினராக போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர், தமிழ்நாடு அரசு தலைமை கொறடாவும், மாநில வர்த்தக அணி துணை தலைவருமான கோவி.செழியன் ஆகியோர் சிறப்புரையாற்ற உள்ளனர். இதில் மாவட்ட பொறுப்பாளர்கள், ஒன்றிய பொறுப்பாளர்கள், திமுக நிர்வாகிகள், கட்சி முன்னோடிகள், தொண்டர்கள், மகளிர் அணி, இளைஞர்களை திரளாக பங்கேற்க வேண்டும் என ஆலத்தூர் ஒன்றியக் குழுத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி, தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

The post கொளக்காநத்தத்தில் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா appeared first on Dinakaran.

Tags : Kolakanantham ,Padalur ,Aladhur ,Alathur East Union DMK ,Kolakkanantham ,Alathur ,Dinakaran ,
× RELATED ஆலத்தூர் தாலுகாவில் ஆசிரியர் தின விழா கொண்டாட்டம்