×

உடையார்பாளையம் அரசு மகளிர் பள்ளியில் இலக்கிய மன்ற விழா

 

ஜெயங்கொண்டம், ஜூலை 25: உடையார்பாளையம் அரசு மகளிர் மேல் நிலைப்பள்ளியில் இலக்கிய மன்ற விழா நடைபெற்றது. விழாவிற்கு பள்ளி தலைமையாசிரியை முனைவர் முல்லைக்கொடி தலைமை வகித்தார். ஆசிரியர் இங்கர்சால் வரவேற்றார், தலைமையாசிரியர் இலக்கிய மன்ற நிகழ்வையும், மாணவிகளுக்கு பயிற்சி அளித்த ஆசிரியர்களையும் பாராட்டினார்.

ஆசிரியர், பாவைசங்கர் ஆங்கில எழுத்தாளர் ஷேக்ஸ்பியர் நாடகங்கள் பற்றி பேசினார். மாணவிகள் சுகந்தனி, சிம்மவாகினி ஆங்கில பாடல்கள் பாடினர். நிகழ்வில் இலக்கிய மன்ற விழா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு தலைமையாசிரியர் பரிசு வழங்கி பாராட்டினார்.நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் தமிழரசி சங்கீதா, சத்யா, தமிழாசிரியர் ராமலிங்கம், காமராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில் மரகதம் நன்றி கூறினார்.

The post உடையார்பாளையம் அரசு மகளிர் பள்ளியில் இலக்கிய மன்ற விழா appeared first on Dinakaran.

Tags : Literary Forum Festival ,Vodiyarpalayam Government Girls School ,Jayangondam ,Vodiyarpalayam ,Government Girls Higher Secondary ,School ,School Principal ,Dr. ,Mullaikodi ,Teacher ,Ingersoll ,Headmaster ,Literary Forum ,Udayarpalayam Government Girls School ,
× RELATED தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு காலபைரவருக்கு சிறப்பு பூஜை