×

போதையில் தாய், மகளை தாக்கிய தந்தை கைது

இடைப்பாடி, அக். 12: இடைப்பாடி ஏரி ரோடு பகுதியை சேர்ந்தவர் பெயிண்டர் பிரபு(40). இவரது மனைவி சாந்தி, மகள் ராஜேஸ்வரி(20). இவர் பிகாம் 2ம் ஆண்டு படித்து வருகிறார். பிரபு அடிக்கடி மது குடித்துவிட்டு வந்து மனைவியுடன் தகராறு செய்து அடிப்பது வழக்கம். நேற்று முன்தினம், குடிபோதையில் வீட்டிற்கு வந்த பிரபுவை, சாந்தி கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பிரபு, அவரை தகாத வார்த்தையால் திட்டியதுடன் அடித்துள்ளார். இதை அவரது ராஜேஸ்வரி கேட்டதற்கு, அப்படித்தான் அடிப்பேன் என கூறியதுடன், கீழே கிடந்த கட்டை எடுத்து அவரையும் சரமாரியாக தாக்கியுள்ளார். பலத்த காயமடைந்த சாந்தி, ராஜேஸ்வரி இருவரும் இடைப்பாடி அரசு மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து ராஜேஸ்வரி அளித்த புகாரின் பேரில், இடைப்பாடி இன்ஸ்பெக்டர் சந்திரலேகா, வழக்குபதிவு செய்து பிரபுவை கைது செய்து சிறையில் அடைத்தார்.

The post போதையில் தாய், மகளை தாக்கிய தந்தை கைது appeared first on Dinakaran.

Tags : Interpadi ,Painter ,Prabhu ,Adipadi Lake Road ,Shanti ,Rajeshwari ,Dinakaran ,
× RELATED புதுச்சேரியில் கோயில் ஊர்வலத்தில் பெயிண்டர் கொலை வழக்கு: போலீஸ் வலை