டெல்லி: ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்ற இந்திய வீரர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடி வருகிறார். டெல்லி மேஜர் தயான் சந்த் மைதானத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் வீரர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடி வருகிறார். பதக்கங்களை குவித்த இந்திய வீரர், வீராங்கனைகளை நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துகிறார். உங்களின் கடின உழைப்பு மற்றும் சாதனைகளால் நாடு முழுவதும் கொண்டாட்ட சூழல் நிலவுகிறது. ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் உங்களின் செயல்திறனுக்காக முழு நாடும் பெருமிதம் கொள்கிறது என பிரதமர் பெருமிதம் தெரிவித்துள்ளார். இதுவரை இல்லாத வகையில் 107 பதக்கங்களுடன் 4வது இடத்தை பெற்ற நிலையில் வீரர்களுடன் கலந்துரையாடி வருகிறார்.
The post ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்ற இந்திய வீரர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்..!! appeared first on Dinakaran.