×

மது பதுக்கி விற்றவர் கைது

கெங்கவல்லி, செப்.13: வீரகனூர் அருகே திட்டச்சேரி கிராமத்தில் மதுபானங்கள் பதுக்கி விற்பனை செய்யப்படுவதாக வந்த புகாரின் பேரில், வீரகனூர் எஸ்ஐ அந்தோணி மைக்கேல் தலைமையிலான போலீசார், அப்பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது வங்கியின் அருகில் சந்தேகத்துக்கிடமாக நின்று கொண்டிருந்தவரை பிடித்து விசாரணை செய்தனர். அதில், அவர் மதுபாட்டில்களை சாக்குப் பையில் வைத்து, கூடுதல் விலைக்கு விற்பனை செய்தது தெரியவந்தது. விசாரணையில் அவர் தெடாவூர் பேரூராட்சியைச் சேர்ந்த முத்துசாமி மகன் ராஜா(55) என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவரை கைது செய்த போலீசார் 26 குவார்ட்டர் பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

The post மது பதுக்கி விற்றவர் கைது appeared first on Dinakaran.

Tags : Kengavalli ,Phitachery ,Weerakanur, Veerakanur SI ,Dinakaran ,
× RELATED விஷ தேனீக்கள் அழிப்பு