×

திருச்செங்கோட்டில் ெகாட்டி தீர்த்த மழை

திருச்செங்கோடு, செப்.7: திருச்செங்கோட்டில், நேற்று மாலை பெய்த திடீர் மழையால் சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியது. திருச்செங்கோட்டில் நேற்று காலை முதலே, வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மாலையில் திடீரென மழை பெய்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பாய்ந்தோடியது. சாக்கடைகள் நிரம்பி மழைநீருடன், சாக்கடை நீர் கலந்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர். திடீர் மழையால் வெப்பம் தணிந்து, குளிர்ச்சியான சீதோஷ்ணம் நிலவியதால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். காய்ந்து கிடந்த மானாவாரி பயிர்களான நிலக்கடலை, சோளம், கம்பு, மரவள்ளி, ஆமணக்கு ஆகியவற்றுக்கு, இந்த மழை துணை செய்யும் என்று விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.

The post திருச்செங்கோட்டில் ெகாட்டி தீர்த்த மழை appeared first on Dinakaran.

Tags : Tiruchengode ,
× RELATED குடிசை வீடு தீயில் எரிந்து சாம்பல்