×

தொழிலாளி வீட்டில் 8 பவுன் நகை, ₹50 ஆயிரம் கொள்ளை

காடையாம்பட்டி, செப்.3: காடையாம்பட்டி அருகே தொழிலாளி வீட்டின் ஓட்டை பிரித்து 8 பவுன் நகை, ₹50ஆயிரம் கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். காடையாம்பட்டி அருகே, கணவாய்புதூர் ஊராட்சி வீராச்சியூரைச் சேர்ந்தவர் ராமசாமி. இவரது மனைவி ராமாயி(50). இருவரும் தனியாக வசித்து வருகின்றனர். இவர்கள் அப்பகுதியில் உள்ள எஸ்டேட்டுகளில் கூலி வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த மாதம் 31ம் தேதி காலை, கூலி வேலைக்கு சென்று விட்டனர். வேலை முடிந்து மாலை வீட்டிற்கு வந்த போது, வீட்டில் உள்ள ஓடுகள் பிரித்த நிலையில் இருந்தது. வீட்டில் இருந்த பீரோவில் 8பவுன் நகை, ₹50ஆயிரம் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றது தெரிய வந்தது. இது குறித்து ராமாயி தீவட்டிப்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் கொடுத்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு வந்து போலீசார் விசாரணை நடத்தினர். மேலும், கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கைரேகைகளை சேகரித்தனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post தொழிலாளி வீட்டில் 8 பவுன் நகை, ₹50 ஆயிரம் கொள்ளை appeared first on Dinakaran.

Tags : Kadaiyampatti ,
× RELATED கரும்பு விற்பனை அமோகம்