×

முதியவர் பூச்சி மருந்தை குடித்து தற்கொலை

ஆண்டிபட்டி, செப். 1: தேனி அருகே பழனிசெட்டிபட்டி பகுதியை சேர்ந்தவர் பருவதராஜ்(63). இவருடைய மனைவி கடந்த 3வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் பருவதராஜ் மனவேதனையில் இருந்ததாக தெரிகிறது. இதனால் நேற்று முன்தினம் அவரது வீட்டில் பூச்சி மருந்தை குடித்து மயங்கி கிடந்ததாக கூறப்படுகிறது. அவருடைய உறவினர்கள் அவரை தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து பருவதராஜின் மகன் கார்மேக கண்ணன் பழனிசெட்டிபட்டி போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

The post முதியவர் பூச்சி மருந்தை குடித்து தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Antipatti ,Aluvadaraj ,Palanisettipatti ,Theni ,
× RELATED ஆண்டிபட்டியில் ஆச்சர்யம் வெள்ள காக்கா பறக்குது பாரு…