×

உயர்மின் அழுத்தம் காரணமாக வீடுகளில் மின்சாதன பொருட்கள் எரிந்தன: 2 குழந்தைகள் காயம்

தாம்பரம்: தாம்பரம் அருகே திடீரென ஏற்பட்ட உயர் மின் அழுத்தத்தால் வீடுகளில் மின்சாதன பொருட்கள் எரிந்து நாசமானது. 2 குழந்தைகள் காயமடைந்தனர். தாம்பரம் அடுத்த துர்கா நகர், தண்டுமாரியம்மன் கோயில் தெருவில் உள்ள குடியிருப்பு குடியிருப்பில் 15க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. நேற்று முன்தினம் இரவு அப்பகுதியில் ஏற்பட்ட திடீர் உயர் மின் அழுத்தத்தால் அங்குள்ள 5 வீடுகளில் உள்ள மின்சாதன பொருட்கள் அனைத்தும் தீபற்றி எரிந்து, கருகியது.

மேலும் வீடு முழுவதும் கரும்புகை சூழ்ந்ததால், ஒரு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த கோலாகியம்மாள் (53) மற்றும் 7 மாத கர்ப்பிணி சித்ரா (30) ஆகியோருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. அஜய்குமார் (2), நான்கு மாத குழந்தை ரோஹித் ஆகிய இருவருக்கும் தீப்பொறி பட்டதால் லேசான காயம் ஏற்பட்டது. இதனால் வீட்டில் இருந்த அனைவரும் அதிர்ச்சியடைந்து உடனடியாக வீட்டில் இருந்து வெளியே ஓடிவந்தனர். பின்னர் பாதிக்கப்பட்டவர்கள் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவம் குறித்து குரோம்பேட்டை காவல் நிலைய போலீசார் மற்றும் மின்வாரிய அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post உயர்மின் அழுத்தம் காரணமாக வீடுகளில் மின்சாதன பொருட்கள் எரிந்தன: 2 குழந்தைகள் காயம் appeared first on Dinakaran.

Tags : TAMBARI ,
× RELATED வீடுகள், கட்டுமான பணியிடங்களில்...