×

ஆந்திராவில் இருந்து வேலூருக்கு பைக்கில் 2 கிலோ கஞ்சா கடத்தி வந்த 2 பேர் கைது: போலீசார் நடவடிக்கை

வேலூர், ஆக.23: ஆந்திராவில் இருந்து வேலூருக்கு பைக்கில் 2 கிலோ கஞ்சா கடத்தி வந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். வேலூர் சத்துவாச்சாரி பகுதிக்கு ஆந்திராவில் இருந்து கஞ்சா விற்பனைக்கு கொண்டு வரவதாக சத்துவாச்சாரி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் இன்ஸ்கெ்டர் ரவி மற்றும் போலீசார் நேற்று சத்துவாச்சாரி வ.உ.சி நகர் பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக பைக்கில் வந்த இருவரை போலீசார் மடக்கி விசாரணை நடத்தினர்.

விசாரணையில், சத்துவாச்சாரி இந்திரா நகர் கருமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சங்கர் (52), சரவணன் (19) என்பதும், இவர்கள் ஆந்திரா மாநிலம் சித்தூரில் இருந்து 2 கிலோ கஞ்சாவை கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் இருவரையும் கைது செய்தனர். மேலும் 2 கிலோ கஞ்சாவுடன் பைக்கை பறிமுதல் செய்தனர்.

The post ஆந்திராவில் இருந்து வேலூருக்கு பைக்கில் 2 கிலோ கஞ்சா கடத்தி வந்த 2 பேர் கைது: போலீசார் நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Andhra ,Vellore ,Dinakaran ,
× RELATED பொங்கல் பண்டிகையையொட்டி விளையாட்டு...