வேலூர், ஆக.17: வேலூர் புதிய பஸ் நிலையம் அருகே கேபிள்வயரால் கழுத்ைத இறுக்கி மெக்கானிக் படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 2 பேரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். சம்பவ இடத்தில் எஸ்பி நேரில் விசாரணை நடத்தினார். வேலூர் புதிய பஸ் நிலையம் அருகே தனியார் லாரி ஷெட் பகுதி உள்ளது. இங்கு வாலிபர் ஒருவர் கழுத்தில் கேபிள் வயரால் இறுக்கிய நிலையில் கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்தார். இதுதொடர்பாக வடக்கு போலீசாருக்கு நேற்று காலை தகவல் கிடைத்தது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
இதில் சடலமாக கிடந்தவர் கேபிள் வயரால் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. அவரை யாரோ மர்ம ஆசாமிகள் கேபிள் வயரை கொண்டு கழுத்தை சுற்றி இறுக்கி துடிக்க துடிக்க கொடூரமாக கொலை செய்துள்ளனர். இதையடுத்து கொலை செய்யப்பட்ட வாலிபர் யார்? என போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அவர் வேலூர் முத்துமண்டபம் பகுதியை சேர்ந்த சஞ்சய் (24), லாரி மெக்கானிக் என தெரியவந்தது. இவருக்கு திருமணமாகவில்லை. அவர் நள்ளிரவில் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என தெரியவந்தது.
இதுகுறித்து தகவலறிந்த எஸ்பி மணிவண்ணன், டிஎஸ்பி திருநாவுக்கரசு ஆகியோரும் சம்பவ இடம் சென்று விசாரணை நடத்தினர். இதையடுத்து சடலத்தை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிந்து முன்விரோத தகராறு காரணமாக சஞ்சய் கொலை செய்யப்பட்டாரா? மது போதையில் ஏற்பட்ட தகராறில் கொல்லப்பட்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? கொலையாளிகள் யார்? என போலீசார் ெதாடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே புதிய பஸ் நிலையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமரா காட்சி பதிவுகளை வைத்து போலீசார் கொலையாளிகள் குறித்து விசாரித்து வருகின்றனர். இதனிடையே இந்த கொலை தொடர்பாக சந்தேகத்தின்பேரில் 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் காரணமாக புதிய பஸ் நிலைய பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
The post கேபிள் வயரால் மெக்கானிக் கழுத்து இறுக்கிகொலை எஸ்பி நேரில் விசாரணை வேலூர் புதிய பஸ் நிலையம் அருகே பரபரப்பு appeared first on Dinakaran.
