×

மணிப்பூர் வன்முறையை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்

சீர்காழி,ஆக.15: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருமுல்லைவாசல் பேருந்து நிலையம் எதிரே மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஒன்றிய செயலாளர் கேசவன் தலைமை வகித்தார். மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர்கள் ஸ்டாலின் மாரியப்பன் துரைராஜ் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.

ஆர்ப்பாட்டத்தில் மணிப்பூர் கலவரத்தை தூண்டிவிட்ட மாநில பாஜக அரசை பதவி விலக கோரியும், கலவரத்தை கட்டுப்படுத்த தவறிய ஒன்றிய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஒன்றிய குழு நிர்வாகிகள் பாரதிராஜா, சரோஜா, ஜோதிமணி, முன்னாள் ஒன்றிய செயலாளர் ஜீவானந்தம் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் 100க்கும் மேற்பட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கலந்து கொண்டனர்.

The post மணிப்பூர் வன்முறையை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Marxist ,Communist ,Manipur ,Sirkazhi ,Tirumullaivasal ,Sirkazhi, Mayiladuthurai district ,Dinakaran ,
× RELATED மின் உதவி பொறியாளரிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மனு