வேலாயுதம்பாளையம், ஆக.14: கரூர் மாவட்டம் தளவாபாளையம் பேருந்து நிறுத்தம் அருகே உள்ள ஒரு குளிர்பான கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள பல்வேறு வகையான புகையிலை பொருட்களை விற்பனை செய்யப்படுவதாக வேலாயுதம்பாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நந்தகோபால் தலைமையிலான போலீசார் சம்பந்தப்பட்ட கடைக்குச் சென்று ஆய்வு செய்தனர்.
அப்போது அங்கு தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது தெரியவந்தது. அதன் அடிப்படையில் அவற்றை பறிமுதல் செய்து போலீசார், விற்பனை செய்த தளவாபாளையம் பகுதியைச் சேர்ந்த மணி என்பவர் மீது வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post குளிர்பான கடையில் புகையிலை பொருள் விற்றவர் மீது வழக்கு appeared first on Dinakaran.