×

கோயிலில் ஒத்திகை பார்த்த போது ‘டம்மி’ தீவிரவாதிக்கு ‘பளார்’ விட்ட இளைஞர்: மக்களை பிணைக்கைதிகளாக பிடித்ததால் ஆத்திரம்

மும்பை: கோயில் வளாகத்தில் ஒத்திகை பார்த்துக் கொண்டிருந்த டம்மி தீவிரவாதி போலீஸ்காரரை இளைஞர் ஒருவர் பளார் விட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. மகாராஷ்டிரா மாநிலம் துலே பகுதியில் அமைந்துள்ள சுவாமி நாராயண் கோயில் வளாகத்தில் தீவிரவாத எதிரப்பு படையினர் மற்றும் போலீசார் தரப்பில் தீவிரவாதிகள் தாக்குதலை முறியடிப்பது எப்படி? என்பது குறித்த ‘போலி’ ஒத்திகை பயிற்சி மேற்கொள்ளப்பட்டது. தீவிரவாதிகளை போன்று வாயில் கறுப்பு துணியுடன், கையில் போலி துப்பாக்கியை சுமந்து கொண்டு போலீசார் கோயிலுக்குள் நுழைந்தனர்.

கோயிலில் இருந்த பக்தர்கள், உண்மையான தீவிரவாதிகள் கோயிலுக்குள் புகுந்துவிட்டதாக எண்ணி பீதியடைந்தனர். குழந்தைகள், பெண்கள் அலறினர். திடீரென கோயிலில் இருந்து சிலரை போலீசார் (தீவிரவாதிகள் உடையில்) பிணைக்கைதிகளாக பிடித்தனர். அதனால் கோயில் வளாகத்தில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது. இவை அனைத்திற்கும் மத்தியில், கோபமடைந்த பிரசாந்த் குல்கர்னி என்ற இளைஞர், போலி துப்பாக்கியை வைத்துக் கொண்டு மிரட்டிய ‘டம்மி’ தீவிரவாதியை அவரது கன்னத்தில் பளார் என்று அறைந்தார்.

அதன்பின் ஒத்திகையில் ஈடுபட்ட போலீசார், தாங்கள் போலி ஒத்திகை நடத்தி வருவதாக மக்களிடம் தெரிவித்தனர். இதனால் மக்கள் இயல்பு நிலைக்கு வந்தனர். இச்சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

The post கோயிலில் ஒத்திகை பார்த்த போது ‘டம்மி’ தீவிரவாதிக்கு ‘பளார்’ விட்ட இளைஞர்: மக்களை பிணைக்கைதிகளாக பிடித்ததால் ஆத்திரம் appeared first on Dinakaran.

Tags : Mumbai ,Tummy ,Rage ,
× RELATED மும்பை விமான நிலையத்தில் ரூ9.75 கோடி போதைப்பொருள் பறிமுதல்