×

ஹவுரா-சென்னை விரைவு ரயில்: முன்பதிவு பெட்டியில் அதிக பயணிகள் ஏற்றியதை கண்டித்து தமிழ்நாட்டு பயணிகள் போராட்டம்

கரக்பூர்: ஹவுரா-சென்னை விரைவு ரயிலில் முன்பதிவு பெட்டியில் முன்பதிவு செய்யாத பயணிகளை அதிகளவில் ஏற்றியதை கண்டித்து தமிழ்நாட்டு பயணிகள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இதையடுத்து கூடுதல் பெட்டிகளை இணைக்கப்பட்டு 4 மணி நேரம் தாமதமாக ரயில் புறப்பட்டு சென்றது. கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி புறப்பட்ட ஹவுரா-சென்னை விரைவு ரயிலில் முன்பதிவு பெட்டிகளில் பயணிகளை அதிகளவில் ஏற்றியதாக கூறப்படுகிறது. ஒரு பெட்டியில் 400 பேர் என 3 மடங்கு அதிக பயணிகளை ஏற்றியதால் பெண்கள், முதியோர், சிறுவர்கள் என கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.

இதையடுத்து கரக்பூர் ரயில் நிலையத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த பயணிகள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இதேபோல முன்பதிவு செய்யாத பயணிகளும் போட்டி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து இரு தரப்பையும் சமாதானப்படுத்திய ரயில்வே போலீசார் ரயிலில் கூடுதலாக இரண்டு பெட்டிகள் இணைக்கப்படுவதாக உறுதி அளித்தனர். பின்னர் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டு சுமார் 4 மணிநேரம் தாமதமாக ஹவுரா-சென்னை விரைவு ரயில் சென்னை புறப்பட்டு சென்றது.

The post ஹவுரா-சென்னை விரைவு ரயில்: முன்பதிவு பெட்டியில் அதிக பயணிகள் ஏற்றியதை கண்டித்து தமிழ்நாட்டு பயணிகள் போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Howra ,Chennai ,Tamil Nadu ,Karagpur ,Howra-Chennai ,
× RELATED இந்திய ஓபன் பேட்மின்டன் இன்று தொடக்கம்..!!