×

பீகாரில் மூன்று பேர் கொலை ராமேஸ்வரத்தில் 2 பேர் கைது

பாட்னா: பீகாரின் முசாபர்பூர் மாவட்டத்தில் உள்ள தானா பகுதியில் கடந்த மாதம் 22ம் தேதி தொழிலதிபர் அசுதோஷ் ஷாகி(45) மற்றும் அவரது பாதுகாவலர்கள் மீது அடையாளம் தெரியாத மர்மநபர்கள் துப்பாக்கி சூடு நடத்தினார்கள். இதில் தொழிலதிபர் அசுதோஷ் மற்றும் அவரது பாதுகாவலர் நிசாமுதின் , பாதுகாவலர் ராகுல்ஆகிேயார் கொல்லப்பட்டனர். மூன்று பேர் கொலை குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இதனை தொடர்ந்து ரகசிய தகவலின்பேரில் பீகார் சிறப்பு படை போலீசார் நேற்று முன்தினம் தமிழ்நாட்டின் ராமேஸ்வரத்துக்கு விரைந்தனர். அங்கிருந்து கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் பிரதுமான் சர்மா மற்றும் கோவிந்த் குமார் சர்மா ஆகியோரை கைது செய்து பீகார் அழைத்து வந்தனர். தேடி வருகின்றனர். அவர்களிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

The post பீகாரில் மூன்று பேர் கொலை ராமேஸ்வரத்தில் 2 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Bihar ,Rameswaram ,Patna ,Thana ,Muzaffarpur district ,Ashutosh Shaki ,
× RELATED பீகார் தலைநகர் பாட்னாவில் ஓட்டலில் பயங்கர தீ விபத்து..!!