×

கழுகுமலை அருகே பூட்டிய வீட்டில் விவசாயி உடல் மீட்பு

கழுகுமலை: கழுகுமலை அருகேயுள்ள லட்சுமிபுரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் நாராயணசாமி மகன் பழனிச்சாமி(52) விவசாயி. இவருக்கு மனைவி தனலட்சுமி மற்றும் ஒரு மகள் உள்ளனர். குடும்ப பிரச்னை காரணமாக கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் மனைவி மற்றும் மகள் பிரிந்து சென்றுவிட்டனர். இதனால் வீட்டில் பழனிச்சாமி தனியாக வசித்து வந்தார். இதனிடையே கடந்த சில மாதங்களாக அவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் (வியாழன்) பழனிச்சாமி வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.கழுகுமலை இன்ஸ்பெக்டர் விஜயகுமார், சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்மோகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது வீட்டில் படுக்கை அறையில் பழனிச்சாமி இறந்த நிலையில் பிணமாக கிடந்தது தெரியவந்தது. மனைவி மற்றும் மகள் பிரிந்து சென்ற நிலையில் நோய்வாய்ப்பட்டு அவர் உயிரிழந்து இருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து பழனிச்சாமி உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து கழுகுமலை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

The post கழுகுமலை அருகே பூட்டிய வீட்டில் விவசாயி உடல் மீட்பு appeared first on Dinakaran.

Tags : Kalgukumalai ,Kalgakumalai ,Narayanasamy ,Palanichami ,Lakshmipuram North Street ,Thanalakshmi ,
× RELATED இலவச பட்டா வழங்கிய இடத்தில் குடியேறி பொதுமக்கள் போராட்டம்