விழுப்புரம்: விழுப்புரம் மேல்பாதியில் சீல் வைக்கப்பட்ட திரவுபதி அம்மன் கோயிலை திறக்க உத்தரவிட உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. சட்டம், ஒழுங்கு பிரச்சனை நிலவுவதால் கோயிலை திறக்க உத்தரவிட முடியாது என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கரிபாளையத்தை சேர்ந்த சுதா சர்வேஷ் குமார் என்பவர் தொடர்ந்த வழக்கில் தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது.
The post விழுப்புரம் மேல்பாதியில் சீல் வைக்கப்பட்ட திரவுபதி அம்மன் கோயிலை திறக்க உத்தரவிட உயர்நீதிமன்றம் மறுப்பு! appeared first on Dinakaran.