×

சித்தர்காட்டில் 9 வயது சிறுவனுக்கு மது கொடுத்த விவகாரத்தில் இளைஞர் கைது..!!

மயிலாடுதுறை: சித்தர்காட்டில் 9 வயது சிறுவனுக்கு மது கொடுத்த விவகாரத்தில் இளைஞர் அறிவழகன் (32) கைது செய்யப்பட்டார். மயிலாடுதுறை அருகே நேற்று மது ஊற்றி சிறுவனை குடிக்க வைத்துள்ளார் இளைஞர் ஒருவர். மயக்க நிலையில் இருந்த சிறுவனை தூக்கிக்கொண்டு மயிலாடுதுறை காவல் நிலையம் வந்து அச்சிறுவனின் பெற்றோர் புகார் அளித்துள்ளனர். அதே பகுதியைச் சேர்ந்த அறிவழகன் என்பவர் தன் மகன் மற்றும் மற்றொரு சிறுவனுக்கு மதுவை ஊற்றி குடிக்க வைத்ததாகவும் இதனால் மது போதையில் சிறுவன் மயக்க நிலைக்கு சென்றுள்ளதாகவும் பெற்றோர் போலீசாரிடம் தெரிவித்தனர்.

இதனை அடுத்து மயிலாடுதுறை போலீசார் வழக்கு பதிவு செய்து மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு சிறுவனை சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். சிறுவனுக்கு மது ஊற்றிக் கொடுத்தாக கூறப்படும் அறிவழகனை போலிசார் தேடி வந்த நிலையில், இன்று மயிலாடுதுறை போலீசாரால் கைது செய்யப்பட்டார். மது குடித்ததால் மயக்கம் ஏற்பட்ட சிறுவனுக்கு மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் தற்போது சிறுவனது உடல்நலம் தெரிவருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

The post சித்தர்காட்டில் 9 வயது சிறுவனுக்கு மது கொடுத்த விவகாரத்தில் இளைஞர் கைது..!! appeared first on Dinakaran.

Tags : Siddarghat ,Mayiladuthurai ,Siddhargat ,Vihazhagan ,
× RELATED கொள்ளிடம் அருகே திரௌபதி அம்மன் கோயில்...