நெல்லை: விவசாயம் செய்வதற்காக அரசு வழங்கிய நிலத்தை வீட்டுமனையாக மாற்றியதால் நிலத்தை திரும்ப பெறக்கோரிய வழக்கில் மாவட்ட ஆட்சியர் பதில் தர உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. ராதாபுரத்தில் நிலமற்ற விவசாயிகள் 30-க்கும் மேற்பட்டோருக்கு தமிழ்நாடு அரசு விவசாயம் செய்ய நிலம் ஒதுக்கியது. இந்த நிலத்தை வீட்டு மனைகளாக மாற்றியதால் அரசு தந்த நிலத்தை திரும்ப பெறக்கோரி ஐகோர்ட் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
The post விவசாயம் செய்ய அரசு வழங்கிய நிலத்தை வீட்டுமனையாக மாற்றியதால் நிலத்தை திரும்ப பெறக்கோரி மனு: ஆட்சியர் பதில் தர ஐகோர்ட் கிளை உத்தரவு appeared first on Dinakaran.
