×

மார்கழி மாதம் நிறைவையொட்டி அதிகாலையில் பஜனை பாடி சிறுவர், சிறுமிகள் வீதி உலா

காஞ்சிபுரம்: மார்கழி மாதத்தில் சிவன் கோயில்களில் திருவெம்பாவையும், பெருமாள் கோயில்களில் திருப்பாவையையும் பாடப்படும். மார்கழி மாதம் பிறந்தாலே தெருக்களில் பஜனை கோஷ்டிகள் பாடிச் செல்வது வழக்கம். மார்கழி மாதம் முழுவதும் நடைபெற்ற இந்த பஜனை நிகழ்வின் நிறைவுநாள் நிகழ்ச்சி நேற்று வெகுவிமரிசையாக நடைபெற்றது.

காஞ்சிபுரத்தில் பிள்ளையார் பாளையம் பகுதியில் உள்ள  நவநீத கிருஷ்ணன் ஆலயத்தில் அதிகாலையிலேயே எழுந்து நீராடிவிட்டு நெற்றியில் திலகமிட்டு வந்த சிறுவர்கள், முதியவர்களின் வழிகாட்டுதல் ஏதுமின்றி கோயிலில் உள்ள ஆர்மோனியம், மிருதங்கம், ஜால்ரா, உள்ளிட்ட வாத்தியங்களை எடுத்து வைத்துக்கொண்டு சுவாமி முன்பு அமர்ந்து பஜனை பாடல்களை மனமுருகி பாடினர்.மார்கழி மாதத்தில் பஜனைப் பாடல்களை பாட முதியவர்களே மறந்து வரும் நிலையில், மார்கழி மாதம் பிறந்த முதல் நாளே ஆர்வத்துடன் வந்து பஜனை பாடல்களைப் பாடத் தொடங்கிய சிறுவர்களின் செயலை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

நேற்றுடன் மார்கழி மாதம் நிறைவடைவதையொட்டி சிறுவர் சிறுமிகள் அம்மன், ராதை போல் வேடமிட்டு சேலைராமசாமி திருவீதியில் இருந்து தொடங்கி கண்ணன் தெரு, மேட்டு தெரு வழியாக 5 தெரு வீதி உலா வந்தனர். ஏராளமான சிறுவர் சிறுமிகள், பாரம்பரிய உடை அணிந்து வந்தனர். இதில் பக்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

Tags : Margazhi ,Kanchipuram ,Shiva ,Perumal ,
× RELATED கதிரவன் கருணையால் உங்கள் இல்லத்தில்...