ஈரோடு, மே 11: பெருந்துறை சிப்காட் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளன. இதன் காரணமாக நாளை (12ம் தேதி) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பெருந்துறை சிப்காட், பெருந்துறை நகர் முழுவதும், சின்ன வேட்டுவபாளையம், பெரிய வேட்டுவபாளையம், ராஜவீதி, கோட்டை மேடு, பெருந்துறை மேற்குபகுதி, தாளக்கரைப்புதூர், பள்ளக்காட்டூர், சிலேட்டர்புரம், சுள்ளிபாளையம் பிரிவு, ஐயப்பா நகர், அண்ணா நகர், சக்தி நகர், கூட்டுறவு நகர் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என மின் வாரியச் செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
The post பெருந்துறையில் நாளை மின்தடை appeared first on Dinakaran.
