×

மகாபாரதம் ஏன் படிக்க வேண்டும் தெரியுமா?

இதிகாசங்கள் இரண்டு. ஒன்று இராமாயணம். இன்னொன்று மகாபாரதம். இதில் மகாபாரதத்தை பஞ்சம வேதம் அதாவது ஐந்தாவது வேதம் என்று சொல்வார்கள். இதை வில்லிபுத்தூரார் மிக அழகாக ஒரு பாடலில் சொல்லுகின்றார்.

நீடாழி உலகத்து மறை நாலோடு ஐந்து என்று நிலை நிற்கவே
வாடாத தவ வாய்மை முனி ராசன் மாபாரதம் சொன்ன நாள்
ஏடாக வட மேரு வெற்பாக வங் கூர் எழுத்தாணி தன்
கோடாக எழுதும் பிரானைப் பணிந்து அன்பு கூர்வாம் அரோ.

எப்பொழுதோ நடந்த இந்த மகாபாரதத்தை இன்றைக்கும் இந்தியாவில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை மக்கள் நினைவில் வைத்திருக்கிறார்கள். படிக்கிறார்கள். விழா நடத்துகிறார்கள். இந்த மகாபாரதக் கதையின் பெரும் பகுதி யுத்தம்தான். கதை முழுவதும் பல்வேறு போர்களும் சதித்திட்டங்களும் நடந்தாலும், பிரதானமான போர் என்பது குருசேத்திரப் போர்தான். மகாபாரதத்தின் சரிபாதி கதை குருஷேத்திர மண்ணில்தான் நடக்கிறது. தர்மத்துக்காக நடந்த போரில் தர்மத்தின்வெற்றியை நிலை நாட்டிய இடம் என்பதால் இதை தர்மசேத்திரம் என்று சொல்கிறார்கள்.

குருசேத்திரம் இந்தியாவில் அரியானா மாநிலத்தில் அமைந்துள்ள புனிதத் தலம். தலைநகர் டெல்லியில் இருந்து 100 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இந்தப் புனிதத்தலத்தில்தான் கண்ணன் அர்ஜுனனுக்கு சொன்ன பகவத் கீதை என்ற உயர்ந்த நூலும் பிறந்தது இங்கே அமைந்துள்ள கிருஷ்ணா அருங்காட்சியகத்தில் மகாபாரதத்தின் பல்வேறு காட்சிகளைக் காணலாம் மகாபாரதத்தின் போர்க்களக் காட்சிகளை நாம் சாதாரணமாகக் கருதி விட முடியாது.

இன்றைக்கும் பயன்படுத்தக்கூடிய பல சூட்சுமமான போர் அமைப்புகள், வியூக முறைகள், போர் தந்திரங்கள், தந்திரங்களை எதிர்கொள்ள வேண்டிய முறைகள், படையை நடத்திச் செல்ல வேண்டிய நுட்பங்கள் என அத்தனை விஷயங்களும் அடங்கியிருக்கின்றன. எத்தனையோ ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னால் நடந்ததாகக் கருதப்படும் ஒரு யுத்தம் இத்தனை தொழில்நுட்ப அறிவோடு நடத்தப்பட்டதா? என்ற கோணத்திலும் மகாபாரதத்தின் போர்க் காட்சிகளை நாம் அணுக வேண்டும்.

அந்த வியூக அறிவு இன்றைக்கும் பயன்படுகிறது. வெறும் எண்ணிக்கை மட்டுமே ஒரு வெற்றியை நிர்ணயித்து விடாது என்பதற்கு மகா பாரதத்தின் போர்க்களக் காட்சிகள் எடுத்துக்காட்டுகளாக விளங்குகின்றன. 40 லட்சம்பேர் பங்குபெற்றதாக ஒரு கணக்கு. 18 நாட்கள் நடந்த மிகப் பிரமாண்டமான மகாபாரதப் போர் பற்றியும் அதில் அமைக்கப்பட்ட வியூகங்கள் பற்றியும் அறிய அறிய வியப்பு. குருசேத்திரப் போரின் போது பாண்டவர் தரப்பில் 7 அக்குரோணி படைகளும், கௌரவர்கள் தரப்பில் 11 அக்குரோணி படைகளுமாக 18 அக்குரோணி படைகள் பங்கெடுத்தது.

ஒரு அக்குரோணி என்பது 21870 தேர்களையும், 21870 யானைகளையும், 65610 குதிரைகளையும், 109350 படை வீரர்களையும் உள்ளடக்கியது படைப்பிரிவுகளின் கணக்கு படைப்பிரிவுகள் பின்வருமாறு கணக்கிடப்படுகின்றன: ஒரு தேர், ஒரு யானை, மூன்று குதிரைகள், ஐந்து படைவீரர்கள் கொண்ட பிரிவு, ஒரு பட்டி எனப்படும்.

3 பட்டிகள் கொண்டது 1 சேனாமுகம்
3 சேனாமுகங்கள் கொண்டது 1 குல்மா
3 குல்மாக்கள் 1 கனம்
3 கனங்கள் 1 வாகினி
3 வாகினிகள் 1 பிரிதனா
3 பிரிதனாக்கள் 1 சம்மு
3 சம்முக்கள் 1 அனிகினி
10 அனிகினிக்கள் 1 அக்குரோணி

குருசேத்திரப்போர் படை விவரங்கள்

குருசேத்திரப் போரில் கௌரவர்களுக்குச் சார்பாக அஸ்தினாபுரத்துப் படைகளும் அவர்களுக்கு ஆதரவான பிற படைகளுமாகப் 11 அக்குரோணி படைகள் அணிவகுத்து நின்றன. பாஞ்சாலம், விராடம், போன்ற பல்வேறு அரசுகளின் படைகளை உள்ளடக்கிய பாண்டவர்களுக்குச் சார்பான 7 அக்குரோணி படைகள் ஒருபுறத்திலுமாகப் போரிட்டன.

1. துரியோதனன் தரப்பில் போரிட்ட படைகள்:

பாகதத்தன் படைகள் – 1 அக்குரோணி
சல்லியனின் மதுராப் படைகள் – 1 அக்குரோணிகள்
பூரிசுவரர்கள் – 1 அக்குரோணி.
கிருதவர்மன் (கிருஷ்ணனின் நாராயணிப் படைகள்) – 1 அக்குரோணி.
சயத்திரதன் படைகள் – 1 அக்குரோணி
காம்போச அரசன் சுதகசினனின்
படைகள் – 1 அக்குரோணி.
விந்தன், அனுவிந்தன் என்போரின் அவாந்திப் படைகள் – 1 அக்குரோணி.
ஐந்து கேகய சகோதரர் படைகள் – 1 அக்குரோணி.
அஸ்தினாபுரத்துப் படைகள் – 2 அக்குரோணி.
இன்றைய வங்காளதேசத்தை தன்னுடைய அசுரபலத்தால் அடக்கி ஆண்ட துரியோதனின் உயிர் நண்பன் மாவீரன் அங்க தேசத்து அரசன் கர்ணன் திரட்டிய படைகள் – 1 அக்குரோணி

2. பாண்டவர் தரப்புப் படைகள்

விருஷ்னி வம்சத்துச் சாத்யகியின் படைகள் – 1 அக்குரோணி
நீலனின் மகிசுமதிப் படைகள் – 1 அக்குரோணி
சேதிசு அரசர் திருட்டகேதுவின் படைகள் – 1 அக்குரோணி
சராசந்தனின் மகன் சயத்சேனனின் படைகள் – 1 அக்குரோணி
துருபதனின் படைகள் – 1 அக்குரோணி
மத்சய அரசன் விராடனின் படைகள் – 1 அக்குரோணி
தமிழ்நாட்டு அரசர்களின் படைகள் (சோழரும், பாண்டியரும்) – 1 அக்குரோணி.
ஒரு அக்குரோணி என்பது 21870 தேர்களையும், 21870 யானைகளையும், 65610 குதிரைகளையும், 109350 படை வீரர்களையும் உள்ளடக்கியது
ஒரு தேர், ஒரு யானை, மூன்று குதிரைகள், ஐந்து படைவீரர்கள் கொண்ட பிரிவு, ஒரு பட்டி எனப்படும்.

3 பட்டிகள் கொண்டது 1 சேனாமுகம்
3 சேனாமுகங்கள் கொண்டது 1 குல்மா
3 குல்மாக்கள் 1 கனம்
3 கனங்கள் 1 வாகினி
3 வாகினிகள் 1 பிரிதனா
3 பிரிதனாக்கள் 1 சம்மு
3 சம்முக்கள் 1 அனிகினி
10 அனிகினிக்கள் 1 அக்குரோணி

போரின் 18 நாள்களிலும் வகுக்கப்பட்ட வியூகங்கள்

1. கிராஞ்ச வியூகம் (heron formation)
2. மகர வியூகம் (crocodile formation)
3. கூர்ம வியூகம் (tortoise or turtle formation)
4. திரிஷுல வியூகம் (trident formation)
5. சக்ர வியூகம் (wheel or discus formation)
6. கமலா வியூகம் or பத்மா வியூகம் (lotus formation)
7. கருட வியூகம் (eagle formation)
(மாவீரன் கர்ணனின் வியூகம்)
8. ஊர்மி வியூகம் (ocean formation)
9. மண்டல வியூகம் (galaxy formation)
10. வஜ்ர வியூகம் (diamond or thunderbolt formation)
11. சகட வியூகம் (box or cart formation)
12. அசுர வியூகம் (demon formation)
13. தேவ வியூகம் (divine formation)
14. சூச்சி வியூகம் (needle formation)
15. ஸ்ரிங்கடக வியூகம் (horned formation)
16. சந்திரகல வியூகம் (crescent or curved blade formation)
17. மலர் வியூகம் (garland formation)
18. சர்ப்ப வியூகம் (snake formation)

போர் முடிவில், கௌரவர் தரப்பில் கிருபர், அசுவத்தாமன், கிருதவர்மன், அங்க தேசத்து அரசன் கர்ணனின் மகன் விருச்சகேது ஆகிய நால்வர் மட்டுமே போரின் இறுதியில் உயிருடன் எஞ்சினர். பாண்டவர் தரப்பில் ஐந்து பாண்டவர்கள், ஸ்ரீகிருஷ்ணர், சாத்தியகி மற்றும் யுயுத்சு ஆகிய எட்டு பேர்கள் மட்டும் உயிருடன் எஞ்சினர். இதுதான் போரின் முடிவு. தர்மத்துக்காக நடத்தப்பட்ட போராக இருந்தாலும் பல தியாகங்கள், அழிவுக்கு பின்னால்தான் அந்த தர்மத்தைக் கூட நிலை நாட்ட வேண்டி இருக்கிறது.

முதல் உலகப்போரிலும் இரண்டாம் உலகப் போரிலும் இதுதான் நடந்தது. அந்தப்போர் வெளியில் மட்டும் நடக்கவில்லை. நம் மனதிலும் நடந்து கொண்டிருக்கிறது. போரின் கோர முகத்தைத் தெரிந்து கொள்ள ஒருமுறை மகாபாரதத்தை படியுங்கள். அதற்காகத்தான் நமக்கு மகாபாரதம் என்கிற இதிகாசம் கொடுக்கப்பட்டிருக்கிறது.

தொகுப்பு: தேஜஸ்வி

The post மகாபாரதம் ஏன் படிக்க வேண்டும் தெரியுமா? appeared first on Dinakaran.

Tags :
× RELATED ஜோதிட சாஸ்திரம் சொல்லும் விதி – மதி – கதி