×

ரமணரின் 73ம் ஆண்டு ஆராதனைஇளையராஜா இசையஞ்சலிதிருவண்ணாமலை ரமணாஸ்ரமத்தில்

திருவண்ணாமலை, ஏப்.19: திருவண்ணாமலை ரமணாஸ்ரமத்தில் நேற்று பகவான் ரமணரின் 73ம் ஆண்டு ஆராதனை நிகழ்ச்சி நடந்தது. அப்போது, இசையமைப்பாளர் இளையராஜா இசையஞ்சலி செலுத்தினார். மதுரை அடுத்த திருச்சுழியில் அவதரித்தவர் மகான் ரமணர். உலக பற்றுகளை துறந்து, அக்னி தலமான திருவண்ணாமலையில் துறவியாக வாழ்ந்தார். அண்ணாமலையார் கோயில் பாதாள லிங்கம், தீபமலைமீதுள்ள விருபாட்சி குகை போன்ற இடங்களில் தவமிருந்த ரமணர், கடந்த 14.4.1950 அன்று திருவண்ணாமலையில் முக்தியடைந்தார். அதையொட்டி, ஆண்டுதோறும் சித்திரை மாதம் தேய்பிறை திரயோதசி 11ம் நாளன்று ரமணரின் மகா ஆராதனை நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். அதன்படி, திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் அமைந்துள்ள ரமணாஸ்ரமத்தில் ரமணரின் 73ம் ஆண்டு மகா ஆராதனை நிகழ்ச்சி நேற்று நடந்தது. அதையொட்டி, அதிகாலை 4 மணிக்கு ருத்ர ஜெபம் நடந்தது. பின்னர், சிறப்பு அலங்காரம், தீபாரதனை, சிறப்பு தமிழ் பாராயணம் ஆகியவை தொடர்ந்து நடைபெற்றது. அதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபட்டனர். மேலும், இசையமைப்பாளர் இளையராஜாவின் இசை ஆராதனையும் நடைபெற்றது. அப்போது, மகான் ரமணரை போற்றும் பாமாலைகளை இசைத்து இசையஞ்சலி செலுத்தினார். மகா ஆராதனை வழிபாட்டில் ஆஸ்ரம நிர்வாகி ரமணன், இசையமைப்பாளர் கார்த்திக்ராஜா மற்றும் பக்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

The post ரமணரின் 73ம் ஆண்டு ஆராதனை
இளையராஜா இசையஞ்சலி
திருவண்ணாமலை ரமணாஸ்ரமத்தில்
appeared first on Dinakaran.

Tags : Ramana ,Ilayaraja ,Thiruvannamalai Ramanasram ,Tiruvannamalai ,Lord ,Tiruvannamalai Ramanasram ,Isaiyanjalithiruvannamalai ,Ramanasram ,
× RELATED சமூக வலைதளங்களில் பரவும் அவதூறு...