×

மக்கள் குறைதீர் கூட்டத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்: கலெக்டர் ஆர்த்தி வழங்கினார்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ஆர்த்தி வழங்கினார். காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள, மக்கள் நல்லுறவு மையத்தில் கலெக்டர் ஆர்த்தி தலைமையில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு மையத்தில் பிரதி திங்கட்கிழமை தோறும் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, பின்னர், அம்மனுக்கள் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு வழங்கி தீர்வு காணப்பட்டு வருகிறது.

இந்நிலையில், நேற்று மாவட்ட கலெக்டர் ஆர்த்தி தலைமையில், பொதுமக்களிடம் இருந்து 300 மனுக்களை பெற்றப்பட்டன. பின்னர், அவற்றின் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள அரசு துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். அந்த வகையில், நேற்று காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலக மக்கள் நல்லுறவு மையத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், உத்திரமேரூர் வட்டம், பெருநகர் கிராமத்தை சார்ந்த 8 பயனாளிகளுக்கு ரூ.6 லட்சம் மதிப்பிலான இலவச வீட்டுமனை பட்டாக்களையும், 6 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு கூரம் கிராமத்தில், ரூ.2.70 லட்சம் மதிப்பிலான இலவச வீட்டுமனைப் பட்டாக்களையும் கலெக்டர் ஆர்த்தி வழங்கினார்.

மேலும், மாற்றுத்திறனாளி நலத்துறை சார்பில், 6 பயனாளிகளுக்கு ரூ.1.41 லட்சம் மதிப்பிலான வங்கிக்கடன் மானியமும், முஸ்லீம் மகளிர் உதவும் சங்கம் மூலம் பல்வேறு தொழில் தொடங்குவதற்கு ரூ.3.85 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ஆர்த்தி வழங்கினார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் கோ.சிவருத்ரய்யா, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) பாபு, தனி துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) சுமதி, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சரவணகுமார் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post மக்கள் குறைதீர் கூட்டத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்: கலெக்டர் ஆர்த்தி வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : Collector ,Aarti ,Kanchipuram ,People's Grievance Day ,Dinakaran ,
× RELATED சீன சண்டை போட்டியில் வென்ற தனலட்சுமி...