![](https://mc-webpcache.readwhere.in/mcms.php?size=large&in=https://mcmscache.epapr.in/post_images/website_212/post_32543349/thumb.jpg)
கயத்தாறு: தூத்துக்குடி மாவட்டம் மாவடிபண்ணையை சேர்ந்தவர் செல்லத்துரை (32). தற்போது சென்னை அடையாறு கிரசண்ட் பார்க் தெருவில் தங்கி ஒரு தனியார் ஐடி கம்பெனியில் வேலை செய்து வந்தார். நெல்லை மாவட்டம் களக்காட்டில் உள்ள உறவினரின் இல்ல திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க தந்தை நவநீதகிருஷ்ணன் (62). தாய் ரேணுகாதேவி (57) ஆகியோருடன் காரில் சென்றுள்ளார். திருமணம் முடிந்து மூவரும் காரில் சென்னை திரும்பிக் கொண்டிருந்தனர். காரை செல்லத்துரை ஓட்டினார். கயத்தாறு அருகே நான்கு வழி தேசிய சாலையில் பாலத்தின் தடுப்புச் சுவரில் கார் மோதியதில் ரேணுகாதேவி, செல்லத்துரை ஆகியோர் அதே இடத்தில் பரிதாபமாக பலியாயினர்.
The post கார் மோதி சென்னை வாலிபர்-தாய் பலி appeared first on Dinakaran.