×

ஏரியில் மூழ்கி தொழிலாளி பலி

ஆவடி: அம்பத்தூர் சோழபுரம் பொன்னம்பலம் தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன்(50). கூலித்தொழிலாளி. நேற்று முன்தினம் வீட்டில் இருந்து அம்பத்தூர் தொழிற்பேட்டைக்கு வேலைக்கு சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. அவரது உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் எந்த தகவலும் கிடைக்கவில்லை. அம்பத்தூர் ஏரியில் ராஜேந்திரன் நேற்று மாலை சடலமாக மிதந்து கொண்டிருந்தார். தகவலறிந்த அம்பத்தூர் தொழிற்பேட்டை தீயணைப்பு வீரர்கள் ஏரியில் இறங்கி சடலத்தை மீட்டனர். பின்னர், அம்பத்தூர் போலீசார் பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். புகாரின்படி போலீசார் விசாரித்தனர். அதில், ராஜேந்திரன் ஏரியில் மீன்பிடிக்க சென்றபோது தண்ணீரில் மூழ்கி இறந்தது தெரியவந்தது….

The post ஏரியில் மூழ்கி தொழிலாளி பலி appeared first on Dinakaran.

Tags : Rajendran ,Ambatur Chozhapuram Ponnambalam Street ,Ambatore ,Dinakaraan ,
× RELATED இடப்பிரச்னை பெண்ணிடம் தகராறு செய்தவர் கைது