×

திருச்சியில் நாளை நடக்கிறது: தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

திருச்சி, மார்ச்.14: தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் தமிழ்நாடு மாநில நகர்புற/ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் மாவட்ட இயக்க மேலாண்மை அலகு சார்பில் தனியார் நிறுவனங்களின் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் திருச்சியில் நாளை நடைபெறுகிறது. தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில் திருச்சி மாவட்டத்தைச் சார்ந்த 18 வயது பூர்த்தியடைந்த, குறைந்தபட்சம் 8ம் வகுப்பு, 10ம் வகுப்பு, ஐடிஐ, டிப்ளமோ, 12ம் வகுப்பு, பட்டப்படிப்பு பெற்ற இளைஞர்களுக்கு (இருபாலரும்) அவரவர் தகுதிக்கேற்ப, தனியார் துறையில் வேலைவாய்ப்பு அளித்திட தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு (மகளிர் திட்டம்) மூலம் வருகிற மார்ச் 15ம் தேதி திருச்சி கலையரங்கில் நடைபெறவுள்ளது.

இந்த முகாமில் பல்வேறு தொழில் நிறுவனங்கள் பங்கேற்கவுள்ளதால், திருச்சி மாவட்டம் மற்றும் இதரப் பகுதிகளைச் சார்ந்த இளைஞர்கள் இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயன்பெற சுயவிபரம், கல்வித்தகுதி, இருப்பிடச்சான்று, புகைப்படம் மற்றும் இதர சான்றிதழ்களின் நகலுடன் நேரில் வருகை தர வேண்டும். மேலும் இணை இயக்குநர்/திட்ட இயக்குநர், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட ஆட்சியரகம், திருச்சி என்ற முகவரியில் நேரிலோ அல்லது 0431-2412726 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு வேலைவாய்ப்பு முகாம் குறித்த தகவல்களைப் பெறலாம் என திருச்சி கலெக்டர் பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.

Tags : Trichy ,
× RELATED திருச்சி என்எஸ்பி சாலையில்...