×

கரூர் கலெக்டர் வழங்கினார் முத்துலாடம்பட்டி சாலையோரம் குடிநீர் குழாய் பதிக்க தோண்டிய பள்ளம் சீரமைக்க வேண்டும்

கரூர்: கரூர் மாநகராட்சிக்குட்பட்ட முத்துலாடம்பட்டி சாலையோரம் குடிநீர் குழாய் பதிப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தை விரைந்து சரி செய்ய வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. கரூர் மாநகராட்சிக்குட்பட்ட தாந்தோணிமலை பகுதியில் இருந்து முத்துலாடம்பட்டி, காந்திகிராமம், ஏமூர் போன்ற பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையோரம் அதிகளவு குடியிருப்புகள் உள்ளன. இந்நிலையில், முத்துலாடம்பட்டி சாலையோரம் குடிநீர் குழாய் பதிப்புக்காக சில நாட்களுக்கு முன்பு பள்ளம் தோண்டப்பட்டது. பணிகள் முடிவடையாத நிலையில், வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்தும் வகையில் செடிகள் வைத்து மறைக்கப்பட்டுள்ளது.இதன் காரணமாக இரவு நேரத்தில் இந்த பகுதியின் வழியாக செல்பவர்களுக்கு இந்த பள்ளம் அருகில் உள்ள மேடு அச்சுறுத்தலாக உள்ளது எனக் கூறப்படுகிறது. எனவே, குடிநீர் குழாய் சீரமைப்பு பணிகளை விரைந்து முடித்து, பள்ளத்தை மூட தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பள்ளத்தை பார்வையிட்டு, இதனை விரைந்து மூட தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.

Tags : Karur ,Muthuladampatti ,
× RELATED கரூர் சுங்ககேட் அருகே அடையாளம் தெரியாத நபர் மயங்கி விழுந்து சாவு