×

அதியமான்கோட்டை பெரியாண்டிச்சி கோயிலில் முப்பூஜை விழா

தர்மபுரி, ஏப்.12: அதியமான்கோட்டை கிராமத்தில் உள்ள பெரியாண்டிச்சியம்மன் கோயிலில், இன்று(11ம் தேதி) முதல் வரும் 14ம் தேதி வரை 4 நாட்கள் முப்பூஜை விழா நடக்கிறது. கணபதி யாகத்துடன் அம்மனுக்கு அபிஷேகம், கொடியேற்றுதல், கங்கணம், கங்கை பூஜை, சக்தி அழைத்தலுடன் விழா துவங்கியது. இன்று(12ம் தேதி) சக்திகரகம் அழைத்தல், அம்மனுக்கு பெரும்பூஜை மற்றும் முப்பூஜை நடக்கிறது. இரவு தெருக்கூத்து நாடகம் நடக்கிறது. நாளை (13ம் தேதி) பெரியாண்டிச்சி அம்மனுக்கு பெரும்பூஜை மற்றும் முப்பூஜை, குள்ள முனியப்பன் செய்தல் மற்றும் அன்னதானம் நடக்கிறது. 14ம் தேதி வாணவேடிக்கையுடன் அம்மன் ஊர்வலம் நடக்கிறது. ஏற்பாடுகளை
நல்லம்பள்ளி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் சண்முகம் தலைமையில் செய்துள்ளனர்.

Tags : Thirty Pooja ,Adiyamankottai Periyandichi Temple ,
× RELATED இருதரப்பு மோதலில் 2 வாலிபர்கள் கைது