×

யுகாதி பண்டிகையையொட்டி சூளகிரியில் ஆடு விற்பனை ஜோர்

சூளகிரி, ஏப்.2: சூளகிரி, ஓசூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், அதிகளவில் தெலுங்கு பேசும் மக்கள் வசித்து வருகின்றனர். இன்று(2ம் தேதி) தெலுங்கு வருடப்பிறப்பு கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ஓசூர்- கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில், சூளகிரி அருகே தற்காலிக ஆட்டு சந்தை நேற்று அமைக்கப்பட்டது. இதற்கு பல்வேறு பகுதிகளில் இருந்து, 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகளை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். இதனை வாங்க சூளகிரி, ஓசூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து 700க்கும் மேற்பட்ட வியாபாரிகள் வந்திருந்தனர். அவர்கள் ஆடுகளை போட்டி போட்டு வாங்கி சென்றனர்.



Tags : Choolagiri ,Yugadi festival ,
× RELATED காரில் கொண்டு சென்ற ₹1.67 லட்சம் பறிமுதல்