×

தேர்தல் பார்வையாளரிடம் வேட்பாளர்கள் புகாரளிக்கலாம்

நாமக்கல்: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பான புகார்களை, தேர்தல் பார்வையாளரிடம் வேட்பாளர்கள் தெரிவிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து நாமக்கல் மாவட்ட தேர்தல் அதிகாரியும், மாவட்ட கலெக்டருமான ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
நாமக்கல் மாவட்ட நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான தேர்தல் பார்வையாளராக இன்னொசன்ட் திவ்யா நியமிக்கப்பட்டுள்ளர். தேர்தல் தொடர்பான புகார்கள் இருந்தால், 89033 48421 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். அரசியல் கட்சியினர் மற்றும் வேட்பாளர்கள் தினமும் காலை 10.30 மணிமுதல் 11.30 மணி வரை, அவரை கலெக்டர் அலுவலகம் அருகில் உள்ள விருந்தினர் மாளிகையில் சந்தித்து புகார் அளிக்கலாம். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Tags :
× RELATED இருதரப்பு மோதலில் 2 வாலிபர்கள் கைது