×

ஈட்டி சிலம்ப கலைக்கூடம் கிளை தொடக்க விழா

திருவள்ளூர், ஜன.29: திருவள்ளூர் ஒன்றியம் திருவூர் ஊராட்சியில் ஈட்டி சிலம்ப கலைக்கூடம் கிளை தொடக்க விழா நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் ஆர்.பழனி தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர்கள் சுதாகர், வை.சுந்தர் எனகிற துரைராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றியக்குழு உறுப்பினர் ஆர்.திலீப்ராஜ், ஊராட்சி துணைத் தலைவர் கோ.கிரி ஆகியோர் வரவேற்றனர்.

திருவூர் ஈட்டி சிலம்ப கலைக் கூடம் கிளையை தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பின் நிறுவனத் தலைவர் சா.அருணன் தொடங்கிவைத்து சிறப்புரையாற்றினார். விழாவில் வார்டு உறுப்பினர்கள் சீ.அன்புநாதன், தனசேகர், உத்தண்டராமன், எழுத்தர் தமயந்தி மகேஷ், நிர்வாகிகள் வி.பழனி, விஜயகுமார், ராம்பிரசாத், சரவணன் மற்றும் சிலம்ப பயிற்சி மாணவர்கள், பெற்றோர்கள் கலந்துகொண்டனர். முடிவில் வார்டு உறுப்பினர் கோ.சுபாஷ் நன்றி கூறினார். 

Tags : Silamba Art Gallery Branch Opening Ceremony ,
× RELATED ஈட்டி சிலம்ப கலைக்கூடம் கிளை தொடக்க விழா