×

(தி.மலை) இன்று குடியரசு தினவிழா கொண்டாட்டம் கலெக்டர் தேசிய கொடியேற்றுகிறார் திருவண்ணாமலையில் பலத்த பாதுகாப்பு

திருவண்ணாமலை ஜன.26: திருவண்ணாமலை ஆயுதப்படை மைதானத்தில், குடியரசு தினவிழா இன்று கொண்டாடப்படுகிறது. கலெக்டர் முருகேஷ் தேசிய கொடியேற்றுகிறார். திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் சார்பில், திருவண்ணாமலை எஸ்பி அலுவலக ஆயுதப்படை மைதானத்தில் குடியரசு தினவிழா இன்று கொண்டாடப்படுகிறது. அதையொட்டி, காலை 8.05 மணியளவில், கலெக்டர் முருகேஷ் தேசிய கொடியேற்றி, போலீஸ் அணிவகுப்பு மரியாதையை ஏற்கிறார். பின்னர், அரசு துறைகளில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு பதக்கம் மற்றும் பாராட்டு சான்றுகள், பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் ஆகியவற்றை கலெக்டர் வழங்குகிறார்.

விழாவில், எஸ்பி பவன்குமார், டிஆர்ஓ பிரியதர்ஷினி, கூடுதல் கலெக்டர் மு.பிரதாப் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர். கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக, வழக்கமாக நடைபெறும் பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும், தியாகிகளை நேரில் அழைத்து கவுரவிக்கும் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டு, தியாகிகளின் வீடுகளுக்கு அதிகாரிகள் நேரில் சென்று மரியாதை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விழாவில் பங்கேற்போர் சமூக இடைவெளியை பின்பற்றவும், கிருமி நாசினி மூலம் கைகளை தூய்மை செய்யவும், முகக்கவசம் அணியவும் தேவையான விழிப்புணர்வு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. குடியரசு தின விழா நடைபெறும் ஆயுதப்படை மைதானத்தில், பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. குடியரசு தினத்தை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள முக்கிய இடங்களுக்கும் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Tags : T.Malai ,Republic Day ,
× RELATED சர்வதேச மகளிர் தினம்: சிறப்பு டூடுல் வெளியிட்டு கொண்டாடிய கூகுள்!!