×

போச்சம்பள்ளி அருகே அரசு பள்ளி மாணவர்கள் 500 பேருக்கு தடுப்பூசி

போச்சம்பள்ளி: போச்சம்பள்ளி அருகே, நாகோஜனஅள்ளியில் செயல்பட்டு வரும் பெரியார் ராமசாமி அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் 15 வயது முதல் 18 வயதிற்குட்பட்ட மாணவ, மாணவிகளுக்கு, கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் நடைபெற்றது. ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற முகாமிற்கு பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் தங்கராஜ், பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற முகாமிற்கு பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் நடராஜ் தலைமை தாங்கினர். இந்த முகாமில் 500க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் கௌதமன், பழனி, திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் தம்பிதுரை, தலைமை ஆசிரியர் சுகுமார், உதவித் தலைமை ஆசிரியர் நாகராஜ், பட்டதாரி ஆசிரியர் கதிரவீரன், உதவியாளர் அருள்முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags : Pochampally ,
× RELATED போச்சம்பள்ளியில் உள்ள பிரபல...