×

எம்ஆர்எப் டயர் தொழிற்சாலையில் தொமுச கொடியேற்றி கல்வெட்டு திறப்பு

பெரம்பலூர்,டிச.27: நாரண மங்கலம், எம்ஆர்எப் டயர் தொழிற்சாலையில் தொ.மு.ச. கொடியேற்றி, கல்வெட்டு திறந்துவைத்து ஆ.ராசா எம்பி, அமைச்சர் சிவசங்கர் ஆகியோர் பேசினர். பெரம்பலூர் மாவட்டம், ஆ த்தூர் மேற்கு ஒன்றியம், நாரணமங்கலம் ஊராட்சியில் உள்ள எம்ஆர்எப் டயர் உற்பத்தி தொழிற்சாலையில் தொமுச கொடியேற்றி, புதிய பெயர் பலகை திறப்பு விழா மற்றும் புதிய கல்வெட்டு திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. எம்ஆர்எப் தொழிற்சங்க தலைவர் ராஜகாந்தம், தொழிற்சங்க துணை தலைவர் ரெங்கசாமி ஆகியோர் வரவேற்றனர். ஆலத்தூர் ஒன்றியக்குழு தலைவர் கிருஷ்ணமூர்த்தி, ஆலத்தூர் மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் சோமு.மதியழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அமைச்சர் சிவசங்கர் தலைமை வகித்தார். விழாவில், திமுக துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா எம்பி கலந்து கொண்டு தொ.மு.ச. கொடியேற்றி, புதிய கல்வெட்டை திறந்து வைத்து பேசினார். இதில் மாவட்ட செயலாளரும் மாவட்ட ஊராட்சி தவைவருமான குன்னம் ராஜேந்திரன், பெரம்பலூர் எம்எல்ஏ பிரபாகரன் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர்.

Tags : Thomusa ,MRF ,
× RELATED குடோனில் இருந்து ரேஷன் கடைகளுக்கு...