×

தேன்கனிக்கோட்டை அருகே நீரில் மூழ்கி குழந்தை பலி


தேன்கனிக்கோட்டை, ஏப்.14: தேன்கனிக்கோட்டை அருகே குழந்தை நீரில் மூழ்கி இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேன்கனிக்கோட்டை அருகே அந்தேவனபள்ளி கிராமத்தை சேர்ந்தவர் வேலன் (31) பொக்லைன் டிரைவர். இவருக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். நேற்று யுகாதி பண்டிகை முன்னிட்டு வேலனின் மனைவி வீட்டு வேலையில் மும்முராமக இருந்துள்ளார். அவர்களது ஒன்றரை வயது குழந்தை கார்திகேயன், வீட்டில் தண்ணீர் நிரப்பட்டிருந்த வாளி அருகே விளையாடிக் கொண்டிருந்தான்.

அப்போது வாளியில் தலை குப்புற விழுந்துள்ளான். பின்னர் வீட்டிற்கு வந்த வேலன் குழந்தையை காணாமல் தேடிய போது வாளியில் இருந்த தண்ணீரில் மூழ்கி இருப்பதை கண்டு உடனடியாக மீட்டு தேன்கனிக்கோட்டை அரசு மருத்தவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இது குறித்து தகவலின் பேரில் தேன்கனிக்கோட்டை போலீசார் குழந்தையின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Dhenkanikottai ,
× RELATED உலக மலேரியா தினத்தையொட்டி தூய்மை பணியாளர்கள் உறுதிமொழி ஏற்பு