×

சூளகிரி அருகே மதுபோதையில் மோதல் தொழிலாளிக்கு கத்திக்குத்து

சூளகிரி, மார்ச் 30: பேரிகை அருகே உள்ள வெங்கடேசபுரத்தைச் சேர்ந்தவர் மாதப்பா மகன் மஞ்சுநாத்(30). கூலி தொழிலாளியான இவருக்கு திருமணமாகி, குழந்தைகள் உள்ளனர். அதே பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் மகன் ராஜேந்திரன்(21). இருவரும் தங்களது நண்பர்களுடன், நேற்று முன்தினம் இரவு அலுசுப்பள்ளி கிராமத்தில் உள்ள மாந்தோப்பில் மது அருந்தினர். அப்போது, மஞ்சுநாத்- ராஜேந்திரனுக்கிடையே போதையில் வாய்த்தகராறு ஏற்பட்டு, கைகலப்பாக மாறியது. ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர். திடீரென ராஜேந்திரன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால், மஞ்சுநாத்தை சரமாரியாக குத்தினார். இதில், படுகாயமடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு, பெங்களூரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் பேரிகை போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags : Choolagiri ,
× RELATED காரில் கொண்டு சென்ற ₹1.67 லட்சம் பறிமுதல்