×

பிரசாரத்திற்கு நவீன ஸ்பீக்கர்கள் பயன்பாடு மைக்செட் தொழிலாளர்கள் மகிழ்ச்சி

புதுக்கோட்டை, மார்ச் 26: தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் 6ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. அரசியல் கட்சிகள் பிரசாரம் செய்ய இன்னும் குறைந்த நாட்களே உள்ள நிலையில் வேட்பாளர்கள் தீவிர ஓட்டு வேட்டை நடத்தி வருகின்றனர். இந்த பிரசாரத்திற்கு வேனில் ஸ்பீக்கரை கட்டி அதில் பதிவு செய்யப்பட்ட வாசங்களையும், வேட்பாளர் பெயர், சின்னம் ஆகியவற்றை சிடியில் பதிவு செய்து ஸ்பீக்கரில் பிளே செய்கின்றனர். இதுஅந்தெந்த பகுதியில் தொடர்ந்த ஒலிபரப்பி வருகின்றனர். இதற்கு அனைத்து வேட்பாளர்களும் ஸ்பீக்கர் வாடகைக்கு எடுப்பதால் சவுண்ட் சர்வீஸ் வைத்திருப்பவர்களுக்கு கிராக்கி ஏற்பட்டுள்ளது. இதனால் சவுண்ட் சர்வீஸ் வைத்திருப்பவர்களுக்கு வருமானம் கிடைப்பதால் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இதுகுறித்து சவுன்ட் சர்வீஸ் உரிமையாளர்கள் கூறியதாவது: இந்த காலங்களில் சுப நிகழ்ச்சிகள் நடக்காது. இதனால் நாங்கள் ஸ்பீக்கர் உள்ளிட்ட பொருட்களை வாடகைக்கு கொடுக்க முடியாது. இதனால் எங்களுக்கு வருமானமும் இருக்காது. இந்நிலையில் தற்போது சட்டமன்ற தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளதால் பலர் பிரசாரத்திற்கு பீக்கர்கள் வாடகைக்கு கேட்கின்றனர். ஒருசில வேட்பாளர்கள் தொடர்ந்து இரண்டு மூன்று ஸ்பீக்கர்கள் எடுத்து செல்கின்றனர். தற்போது அதிக அளவில் தேவை ஏற்பட்டுள்ளதால் எங்களால் வாடகைக்கு கொடுக்க முடியவில்லை. இன்னும் சுயேட்சைகளுக்கு சின்னம் ஒதுக்கியவுடன் ஸ்பீக்கர்களின் தேவை அதிகரிக்கும் என்பதில் சந்தேகமில்லை என்றனர்.

Tags : Mikeset ,
× RELATED எப்போ கேட்கும் மைக்செட் சத்தம்...?...