×

செங்கம் அருகே பரிதாபம் பைக் மீது வேன் மோதி 2 விவசாயிகள் பலி

செங்கம், மார்ச் 17: செங்கம் அருகே பைக் மீது வேன் ேமாதி 2 விவசாயிகள் பரிதாபமாக பலியாகினர். திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த கொட்டக்குளம் கிராமத்தை சேர்ந்தவர்கள் ஆறுமுகம்(55), பாலைய்யா(54). இவர்கள் இருவரும் விவசாயிகள். நேற்று காலை இவர்கள் இருவரும் சொந்த வேலை காரணமாக, திருவண்ணாமலைக்கு பைக்கில் புறப்பட்டு சென்றனர். பின்னர், வேலை முடிந்ததும் ஊர் திரும்பினர். செங்கம் அடுத்த பாச்சல் கிராமம் அருகே வந்தபோது எதிரே வந்த வேன் மீது இவர்களது பைக் நேருக்குநேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் தூக்கி வீசப்பட்டதில் ஆறுமுகம், பாலைய்யா ஆகிய இருவரும் படுகாயம் அடைந்தனர். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள், அவர்களை மீட்டு உடனடியாக திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும், சிகிச்சை பலனின்றி ஆறுமுகம், பாலைய்யா ஆகிய இருவரும் அடுத்தடுத்து பரிதாபமாக இறந்தனர். தகவலறிந்த பாச்சல் போலீசார், 2 பேரின் சடலங்களையும் பிரேத பரிசோதனைக்காக அதே மருத்துவமனையில் ஒப்படைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Sengum ,
× RELATED கஞ்சாவிற்கு அடிமையாகும் இளைஞர்கள்...