×

வனப்பகுதியில் கிடந்த 3 நாட்டு துப்பாக்கி மீட்பு

தேன்கனிக்கோட்டை, மார்ச் 16: அஞ்செட்டி அருகே கேட்பாரற்று கிடந்த 3 நாட்டு துப்பாக்கிகளை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அஞ்செட்டி அருகே கேரட்டி காப்புக்காடு பகுதியில், நேற்று முன்தினம் இரவு அஞ்செட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கவேல் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கேரட்டி காப்புக்காட்டில் 3 நாட்டு துப்பாக்கிகள் கேட்பாரற்று கிடந்தது. துப்பாக்கிகளை கைப்பற்றி, மர்மநபர்கள் யாராவது வனவிலங்குகளை வேட்டையாட எடுத்து சென்றபோது, போலீசாரை கண்டதும் காட்டில் வீசி சென்றனரா என விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
× RELATED உலக மலேரியா தினத்தையொட்டி தூய்மை பணியாளர்கள் உறுதிமொழி ஏற்பு