சென்னை: தமிழ்நாட்டில் இதுவரை ரூ.1,200 கோடி மதிப்புள்ள பணம், தங்கம், பரிசுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார். இதுவரை ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.169.85 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ரூ.2.95 கோடி மதிப்புள்ள மதுபானம், ரூ.82.73 கோடி மதிப்புள்ள போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
