×

23 காவல்அதிகாரிகள் இன்று பணி ஓய்வு

 

சென்னை: சென்னை காவல்துறையில் பணியாற்றி இன்று ஓய்வு பெறும் 23 காவல் அதிகாரிகளை கூடுதல் கமிஷனர் ஜோஷி நிர்மல்குமார் நேரில் அழைத்து பாராட்டி சான்றிதழ் வழங்கினார். சென்னை பெருநகர காவல் துறையில் பணியாற்றி ஓய்வு பெறும் போலீசாரை கவுரவிக்கும் வகையில் போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவுப்படி உயர் அதிகாரிகள் பணி ஓய்வு பெறும் போலீசாரை பாராட்டி சான்றிதழ்கள் வாங்கி கவுரவித்து வருகின்றனர்.

அந்த வகையில், சென்னை பெருநகர காவல்துறையில் 22 ஆண்டுகள் முதல் 41 ஆண்டுகள் வரை சிறப்பாக பணியாற்றி அயுதப்படை துணை கமிஷனர் அன்வர் பாஷா, ஊர் காவல் படை கூடுதல் துணை கமிஷனர் அமுதல் தாஸ், மத்திய குற்றப்பிரிவு உதவி கமிஷனர் சங்கு, ஒரு இன்ஸ்பெக்டர், 8 எஸ்ஐக்கள், 10 சிறப்பு எஸ்ஐக்கள், ஒரு தலைமை காவலர் என மொத்தம் இன்று 23 காவல் அதிகாரிகள் பணி ஓய்வு பெறுகின்றனர்.

இதனால் அவர்களின் பணியை சிறப்பிக்கும் வகையில் போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவுப்படி தலைமையிட கூடுதல் கமிஷனர் ஜோஷி நிர்மல் குமார் இன்று ஓய்வு பெறும் 23 காவல் அதிகாரிகளை நேரில் அழைத்து பாராட்டி சான்றிதழ்கள் வாங்கினார். இந்நிகழ்ச்சியில் தலைமையிட இணை கமிஷனர் மகேஸ்வரன் மற்றும் ஓய்வு பெறும் காவல் அதிகாரிகளின் குடும்பத்தினர் உடனிருந்தனர்.

Tags : Chennai ,Joshi Nirmalkumar ,Chennai Police ,Chennai Metropolitan Police Department ,
× RELATED முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை...